2024 உருசிய அரசுத்தலைவர் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
உருசியாவின் 8-ஆவது அரசுத்தலைவர் தேர்தல் 2024 மார்ச் 15 முதல் மார்ச் 17 வரை நடைபெற்றது.[3][4].[5] வெற்றி பெறும் வேட்பாளர் 2024 மே 7 அன்று புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்பார்.[6] 6 சுயேச்சை வேட்பாளர்களும், 9 அரசியல் கட்சி வேட்பாளர்களுமாக மொத்தம் 15 பேர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.[7]இத்தேர்தலில் விளாதிமிர் பூட்டின் அவர்கள் 6வது முறையாக வெற்றிப் பெற்றார்.
| |||||||||||||||||||||||||||||||
பதிவு செய்தோர் | 11,42,12,734 | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 77.49% ( 9.99) | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
உருசிய அரசுத் தலைவர் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் | |||||||||||||||||||||||||||||||
|
நடப்பு அரசுத்தலைவரும் சுயேச்சை வேட்பாளருமான விளாதிமிர் பூட்டின் 2020 அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் போட்டியிடத் தகுதி பெற்றார்.[8][9][10]
2018 அரசுத்தலைவர் தேர்தலில் இருந்ததைப் போலவே, உருசிய எதிர்க்கட்சியின் மிக முக்கியமான உறுப்பினரான அலெக்சேய் நவால்னி குற்றவியல் தண்டனையின் காரணமாக போட்டியிடுவது தடுக்கப்பட்டது.[11][12][13] தேர்தலின் போது அவர் சிறையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும், 2024 பெப்ரவரி 16 அன்று அவர் சிறையிலேயே இறந்தார்.[14][15][16] நவால்னிக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகப் பரவலாகக் கருதப்பட்டது. இதன் விளைவாக, பல பார்வையாளர்கள், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், இத்தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மாறாக, 2022-இல் உக்ரைனுடன் முழு அளவிலான போரைத் தொடங்கியதில் இருந்து அரசியல் அடக்குமுறைகளை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பூட்டின், தேர்தல் செயல்முறையில் ஆதிக்கம் செலுத்துவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.[17][18][19][20][21]