அந்துவஞ்சாத்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்துவஞ்சாத்தன் என்பவர் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவனான ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நண்பனாவான்.[1] இவன் பாண்டியனின் அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் இருந்த அவரது ஐந்து நண்பர்களில் ஒருவன் ஆவான்.
அவர்கள்
- மாவன்,
- ஆந்தை,
- அந்துவஞ்சாத்தன்,
- ஆதன் அழிசி,
- இயக்கன் எனப்பட்ட ஐவர். இவர்களில் ஒருவன் இந்த அந்துவஞ்சாத்தன்.
சங்கப்பாடல்களில் இவனைப் பற்றியுள்ள குறிப்புகள் பின்வருமாறு: இவனது பகைவர்கள் உடல் திணவெடுத்து இவனைத் தாக்க வருவதாகச் செய்தி வந்தது. பாண்டியன் வஞ்சினம் பேசுகிறான். அவர்களைப் புறங்காணேன் ஆயின் எனக்கு இன்னது நேரட்டும் என்கிறான். இந்த ஐவரோடும் என் கண் போன்ற நண்பரோடும்,கேளிரோடும் இனிமையாக மகிழ்ந்து திளைத்து இப்போது வாழ்கிறேன். பகைவரைப் புறம் காணாவிட்டால் இந்த மகிழ்வான வாழ்க்கை எனக்கு இல்லாமல் போகட்டும் என்கிறான்.[2]
அந்துவஞ்சாத்தன் என்பவன் சேரர் மரபில் வந்தவன். 'உரைசால் அந்துவஞ்சாத்தன்' என்று இவன் சிறப்பிக்கப்படுவதால் இவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனுக்கு அமைச்சனாக விளங்கியவன் எனலாம்.(ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது - புறநானூறு 71)
Remove ads
ஒப்பிட்டுக்கொள்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads