அம்மையப்பர்

From Wikipedia, the free encyclopedia

அம்மையப்பர்
Remove ads

”உயிரினங்களுக்கெல்லாம் தாய்தந்தையர் உண்டு. மரத்தின் விதைக்குக்கூட அதன் விதையைத் தோற்றுவித்த மூலப் பெற்றோர் உண்டு. தானே தோன்றி மறையும் பாசிக்குக்கூட ஈரம்-வெப்பம் தாய்தந்தை”. இந்தக் மூலத்துக்கு மனித உரு தந்து தமிழ்மக்கள் வழிபட்டுவந்தனர். இந்த உருவத்தை அம்மையப்பன் (அம்மை அப்பன்) என்றனர். ஓருருவ வடிவிலும், ஈருருவ வடிவிலும் இதனை வழிபடுவர். ஓருருவ வடிவத்தை 'அர்த்தநாரி' என்றும், அர்த்தநாரீசுவரன் என்றும் குறிப்பிடுவர். [1] [2]

Thumb
ஓருருவில் அம்மையப்பர் சிலை
Thumb
ஈருருவில் அம்மையப்பர் சிலை

அம்மையை ஆற்றல் என்றும், அப்பனை வெட்டவெளி என்றும் கண்டனர். அப்பனுக்குச் “சிவ்” என்று ஏறும் சத்தி வருவது அம்மையால். எனவே அப்பனைச் சிவன் என்றும், அம்மையைச் சத்தி என்றும் தூய தமிழ்ச்சொற்களால் பெயரிட்டுக்கொண்டனர்.

இப்படி உருவான வழிபாட்டு உருவமே அம்மையப்பர். சிவம் சைவம் என்று சைவம் என மருவிற்று. மயல் < மையல், பயல் < பையல், பையன், போன்றவற்றை ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளலாம்.

Remove ads

சங்கப்பாடலில் அம்மையப்பர் உரு

மதுரைக் கண்ணத்தனார் என்னும் புலவர் பகலும் இரவும் கலந்து நிற்கும் அந்திவானம் அம்மையப்பன் உருவம் போலக் காணப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். செவ்வானம் மறைக்கும் சிவன் போலவும், இருள் மால் போலவும் ஒன்று சேர்ந்திருப்பது இருபெருந் தெய்வங்கள் ஒருங்கிணைந்து இருப்பது போலக் காணப்பட்டதாம். [3]

வள்ளலார் பாடல்

தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாயணைப்பள் தாயடித்தால்
பிடுதொரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத்து ஆடும் புனிதன் நீ ஆதலால் என்னை
அடுத்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா இனி ஆற்றேன். [4]

மேலும் படங்கள்

  • இடப்புறம் அம்மை தமிழ்மரபு.
  • வலப்புறம் அம்மை புதிர்மரபு.

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads