அலெக்சாந்தர் நெவ்ஸ்கி
நோவ்கோரோட்டின் இளவரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலெக்சாந்தர் யரோஸ்லவிச் நெவ்ஸ்கி (உருசியம்: Алекса́ндр Яросла́вич Не́вский; pronounced [ɐlʲɪˈksandr jɪrɐˈslavʲɪtɕ ˈnʲɛfskʲɪj]( கேட்க); 13 மே 1221[1] – 14 நவம்பர் 1263) என்பவர் நோவ்கோரோத் இளவரசர் (1236–52), கீவின் பெரும் இளவரசர் (1236-52) மற்றும் விலாடிமிரின் பெரும் இளவரசர் (1252–63) ஆவார். இவரது காலத்தில் கீவிய ருஸ்ஸானது கடினமான காலத்தில் இருந்தது.
இவர் மத்திய கால ருஸ்ஸின் முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். இவர் செவோலோட் பெரும் கூட்டின் பேரன் ஆவார். ஜெர்மனி மற்றும் சுவீடன் நாட்டு ஊடுருவலாளர்களைத் தடுத்ததன் மூலம் பெரும் புகழ் பெற்றார். அதே நேரத்தில் பலம் வாய்ந்த தங்க நாடோடிக் கூட்டத்திற்கு கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார். 1547ல் மகாரியசால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads