இந்தியாவில் பெண்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் பெண்கள் நிலை கடந்த சில ஆயிர ஆண்டுகளில் வெகுவாக மாற்றம் அடைந்துள்ளது.[3][3] பண்டைக் காலத்தில் பெண்கள் ஆண்களுடன் சமநிலையில் இருந்தனர்;[4] இடைக்காலங்களில் மிகவும் தாழ்ந்த நிலையை எய்தினர்;[5] சம உரிமைகளுக்கு அண்மை நூற்றாண்டில் பல சீர்திருத்தவாதிகள் போராடி வந்துள்ளனர். தற்கால இந்தியாவில் பல உயர்ந்த பதவிகளில் பெண்கள் இருந்துள்ளனர்; இந்திய அரசில் குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளனர்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
As of 2011[update],இந்திய மக்களவையில் மக்களவைத் தலைவரும் எதிர்கட்சித் தலைவரும் பெண்களாவர். இருப்பினும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை கூடி வருகின்றது; வன்கலவி, அமிலத் தாக்குதல், வரதட்சணைக் கொலைகள், இளம்பெண்களை கட்டாயமாகப் பாலியத் தொழில்களில் ஈடுபடுத்துதல் என்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.[6][7][8]
Remove ads
காலவரிசைப்படி இந்தியாவில் பெண்களின் சாதனைகள்

- 1848: சாவித்திரி பாய் புலேவும் அவரது கணவர் ஜோதிராவ் புலேவும் புனேவில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர். சாவித்திரிபாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆனார்.
- 1879: ஜான் எலியட் டிரிங்க்வாட்டர் பெத்தூன் 1849-இல் பெத்தூன் பள்ளியை நிறுவினார். இதுவே 1879-இல் இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரியான பெத்தூன் கல்லூரியாக தரமுயர்ந்தது.
- 1883: சந்திரமுகி பாசுவும் கடம்பினி கங்குலியும் இந்தியாவிலும் பிரித்தானியப் பேரரசிலும் பட்டம் பெற்ற முதல் பெண்களாயினர்.
- 1886: கடம்பினி கங்கூலியும் ஆனந்தி கோபால் ஜோசியும் மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சி பெற்ற முதல் பெண்கள் ஆயினர்.
- 1898: சகோதரி நிவேதிதா பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது.
- 1905: சுசான்னே டாட்டா தானுந்தை ஒட்டிய முதல் இந்தியப் பெண் ஆனார்.[9]
- 1916: வெறும் ஐந்து மாணவியரைக் கொண்டு 2 ஜூன் 1916-இல் சமூகப் போராளி தொண்டோ கேசவ் கார்வேயால் முதல் மகளிர் பல்கலைக் கழகமான எஸ்என்டிட்டி மகளிர் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
- 1917: அன்னி பெசண்ட் இந்திய தேசியக் காங்கிரசின் முதல் பெண் தலைவர் ஆனார்.
- 1919: தனது தனித்துவமான பொது சேவைக்கென பிரித்தானிய அரசினால் கெய்சர்-இ-ஹிந்த் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியானார் பண்டித ரமாபாய்.
- 1925: சரோஜினி நாயுடு இந்திய தேசியக் காங்கிரசின் இந்தியாவில் பிறந்த முதல் பெண் தலைவரானார்.
- 1927: அனைத்திந்திய மகளிர் மாநாடு நிறுவப்பட்டது.
- 1936: சரளா தாக்ரல் வானூர்தியை ஓட்டிய முதல் பெண் ஆனார்.[10][11][12]
- 1944: அசிமா சாட்டர்ஜி இந்தியப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் ஆனார்.
- 1947: 15 ஆகஸ்ட் 1947-இல், சுதந்திரத்தைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சமஸ்தானத்தின் ஆளுநரானதன் மூலம் சரோஜினி நாயுடு, நடைமுறையில் இந்தியாவின் முதல் ஆளுநரானார். அதே நாளில், அம்ரித் கெளர் முதல் அமைச்சரவையில் நாட்டின் முதல் பெண் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார்.
- சுதந்திரத்திற்குப் பின்: ருக்மணி தேவி அருண்டேல் இந்திய வரலாற்றில் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். கோயில் நடனக் கலைஞர்களான தேவதாசிகளிடையே நிலவும் அசல் 'சதிர்' பாணியில் இருந்து இந்திய பாரம்பரிய நடன வடிவமான பரதநாட்டியத்தில் அவர் மிக முக்கியமான மறுமலர்ச்சியாளராகக் கருதப்படுகிறார். பாரம்பரிய இந்திய கலைகள் மற்றும் கைவினைகளை மீண்டும் நிலைநிறுத்தவும் அவர் பணியாற்றினார்.
- 1951: தெக்கான் ஏர்வேசின் பிரேம் மாத்துர் முதல் வணிகமுறை இந்திய வானோடி ஆனார்.

- 1953: விஐயலட்சுமி பண்டிட் ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவரான முதல் பெண்ணும் முதல் இந்தியரும் ஆனார்.
- 1959: அன்னா சாண்டி உயர் நீதி மன்ற (கேரள உயர் நீதி மன்றம்) நீதிபதியான முதல் பெண் ஆனார்.[13]
- 1963: சுசேதா கிருபளானி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஆனார். இந்திய மாநிலங்களில் முதலமைச்சர் பதவியில் இருந்த முதல் பெண் இவராவார்.
- 1966: கேப்டன் துர்கா பானர்ஜி இந்தியன் ஏர்லைன்சு நிறுவனத்தின் முதல் பெண் விமானி ஆனார்.
- 1966: கமலாதேவி சட்டோபாத்தியாய் ராமன் மகசேசே விருது பெற்றார்.
- 1966: இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார்
- 1970: ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் ஆனார் கமல்ஜித் சந்து.
- 1972: கிரண் பேடி இந்தியக் காவற்துறைப் பணியில் தெரிவான முதல் பெண் அதிகாரி.[14]
- 1978: ஷீலா ஸ்ரீ பிரகாஷ் சுதந்திரமாக ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தை தொடங்கிய முதல் பெண் தொழிலதிபர் ஆவார்.
- 1979: அன்னை தெரசா நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியானார்.
- 1984: மே 23-ஆம் நாள் பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்.
- 1986: சுரோகா யாதவ் தொடர்வண்டி ஓட்டுனரான முதல் ஆசியப் பெண் ஆனார்.
- 1989: பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்.[13]
- 1991: மும்தாஜ் காசி டீசல் தொடருந்தை ஓட்டிய முதல் ஆசியப் பெண் ஆனார்.[15]
- 1992:பிரியா ஜிங்கன் இந்திய இராணுவத்தில் சேர்ந்த முதல் பெண் கேடட் ஆனார் (பின்னர் 6 மார்ச் 1993 இல் நியமிக்கப்பட்டார்)[16]
- 1999: அக்டோபர் 31-இல் சோனியா காந்தி இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
- ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி, கர்ணம் மல்லேஸ்வரி ஆவார், இவர் சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்கும் (weightlifting) போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- 2007: சூலை 25-ஆம் நாள் பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆனார்.
- 2009: சூன் 4-ஆம் நாள் மீரா குமார் நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஆனார்.
- 2011: அக்டோபர் 20 அன்று, பிரியங்கா என் (Priyanka.N)., நம்ம மெட்ரோவின்(Namma metro)தொடக்க ரயிலை ஓட்டி, முதல் பெண் இந்திய மெட்ரோ ஓட்டுநர்(pilot)ஆனார்..[17]
- 2011:மிதாலி மதுமிதா சேனா பதக்கம் வென்ற முதல் பெண் அதிகாரி என்ற வரலாறு படைத்தார்..
- 2014: மோடி அமைச்சகத்தில் 7 பெண் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 6 பேர் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர், இது வரலாற்றில் எந்த இந்திய அரசாங்கத்திலும் அதிக எண்ணிக்கையிலான பெண் கேபினட் அமைச்சர்கள். பாதுகாப்பு மற்றும் வெளியுறவு போன்ற மதிப்புமிக்க அமைச்சகங்கள் பெண் அமைச்சர்களால் நடத்தப்படுகின்றன Indian government .[18]
- 2017: On 25 March, Tanushree Pareek became the first female combat officer commissioned by the Border Security Force.
- 2018: In February, 24 year old Flying Officer Avani Chaturvedi of the Indian Air Force became the first Indian female fighter pilot to fly solo. She flew a MiG-21 Bison, a jet aircraft with the highest recorded landing and take-off speed in the world.[19]
Remove ads
மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads