இந்தியாவில் வங்கித்தொழில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் வங்கித்தொழில் முதன்முதலாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் துவங்கியது. இந்தியாவின் மிகப்பழமையான வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாகும், அது 1806 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படத் துவங்கியது. இந்திய ஸ்டேட் வங்கி ஓர் அரசுடைமை வங்கியும், நாட்டின் மிகப்பெரும் வணிக வங்கியுமாகும். மைய வங்கித்தொழிலின் பொறுப்புகளை மேற்கொண்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியானது , 1935 ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய இம்பீரியல் வங்கியிடமிருந்து இந்த பொறுப்புகளை முறைப்படி பெற்றுக்கொண்டதும், அதனை வணிகவங்கியாகச் செயல்படும் நிலைக்கு மாற்றியது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றபின், ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டு, அதற்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம், 14 மிகப்பெரும் வணிக வங்கிகளை அரசுடைமையாக்கியது; அதேபோல் 1980 ஆம் ஆண்டில் மேலும் ஆறு அடுத்த மிகப்பெரும் வங்கிகளை அரசுடைமையாக்கியது.

தற்சமயம், இந்தியாவில் 96 அட்டவணையிட்ட வணிக வங்கிகள் (ஷெட்டியூல்ட் வணிக வங்கிகள்) (எஸ்சிபிகள்) உள்ளன. 27 பொதுத்துறை வங்கிகள் (அதாவது, இந்திய அரசாங்கம் தன்வசமே பணயப்பிணைப்பு வைத்துள்ளது), 31 தனியார் வங்கிகள் (அவை அரசாங்க பணயப்பிணைப்பு பெறாதவை; பொதுப்படையாக பட்டியலில் உள்ளவை மற்றும் பங்குச் சந்தையில் வணிகம் புரிய அதிகாரம் பெற்றவை ஆகும்) மற்றும் 38 அயல் நாட்டு வங்கிகளும் உள்ளன. அவை அனைத்தும் தனித்தனியாக செயல்பட்டாலும், ஒருங்கிணைந்த ஒரு வலையமைப்பாக ஆக மொத்தம் 53,000 கிளைகள் மற்றும் 17,000 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) கொண்டு செயல்படுகின்றன. ஐசிஆர்ஏ லிமிடெட் என்னும் ஒரு மதிப்பீட்டு நிறுவனத்தின் அறிக்கையின்படி, பொதுத்துறை வங்கிகள் வங்கித்தொழிலின் மொத்த சொத்துக்களில் 75% பங்கையும், தனியார் மற்றும் அயல் நாட்டு வங்கிகள் முறையே 18.2% மற்றும் 6.5% பங்குகளையும் வைத்துக்கொண்டுள்ளன.
Remove ads
தொடக்ககால வரலாறு
முதல்உலகப் போரில் இருந்து சுதந்திரம் பெறும்வரையில்
சுதந்திரம் பெற்றபிறகு
தேசியமயமாக்கல்
தாராளமயமாக்குதல்
கூடுதல் வாசிப்பு
குறிப்புகள்
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads