உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை)

From Wikipedia, the free encyclopedia

உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை)
Remove ads

உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை) (World Day of Peace) என்பது ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் முதல் நாள் கத்தோலிக்க திருச்சபையால் கொண்டாடப்படுகின்ற சிறப்பு நிகழ்வு ஆகும். உலக மக்கள் அனைவரும் விரும்பி எதிர்பார்க்கின்ற அமைதி உருவாகிட இறைவனை நோக்கி வேண்டுதல் எழுப்பவும், அமைதியின் இன்றியமையாமை பற்றி அனைவரையும் சிந்திக்கத் தூண்டவும் இந்நாள் பயன்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகின்ற உலக அமைதி நாளைத் திருத்தந்தை ஆறாம் பவுல் 1967ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். முதல் உலக அமைதி நாள் 1968, சனவரி முதல் நாள் கொண்டாடப்பட்டது[1].

உலக அமைதியின் தேவையை வலியுறுத்திக் கொண்டாடப்படுகின்ற மற்றொரு நாளும் அனைத்துலக அமைதி நாள் (International Day of Peace) என்னும் பெயரைக் கொண்டுள்ளது. அது ஐக்கிய நாடுகள் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவின் அனைத்துலக அமைதி நாள் முதன்முறையாக 1981ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது[2]

Remove ads

கத்தோலிக்க திருச்சபையின் உலக அமைதி நாள் வரலாறு

முதல் உலகப் போர் நிகழ்ந்த காலத்திலும், இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்திலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த திருத்தந்தையர்கள் உலக அமைதிக்காக நாடுகளிடையே நல்லுறவை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக, பதினைந்தாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் பயஸ் ஆகியோர் உலக அமைதிக்காக உழைத்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பனிப்போர் காலத்தில் இருபத்திமூன்றாம் யோவான் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் யூனியனின் தலைவர்களைச் சந்தித்து உலக அமைதிக்காக ஒத்துழைக்குமாறு உருக்கமாக வேண்டிக்கொண்டார். குறிப்பாக, அமைதியின் இன்றியமையாமையை வலியுறுத்தி, "அவனியில் அமைதி" (Peace On Earth; இலத்தீனில் "Pacem in Terris") என்னும் தலைப்பில் ஒரு சுற்றுமடலை எழுதி 1963, ஏப்பிரல் 11ஆம் நாள் வெளியிட்டார். அம்மடல் கிறித்தவர்களுக்கு மட்டுமன்றி, "நல்லுள்ளம் கொண்ட எல்லா மனிதருக்கும்" எழுதப்பட்டதாகத் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இருபத்திமூன்றாம் யோவானுக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற ஆறாம் பவுல் என்னும் திருத்தந்தை உலகில் நிலையான அமைதி ஏற்படவேண்டும் என்றால் நாடுகளுக்கிடையே நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும் என்றும், அனைத்துலக மக்களின் வளர்ச்சியே அமைதிக்கு வழி என்றும் வலியுறுத்தி "மக்களின் முன்னேற்றம்" (On the Development of Peoples; இலத்தீனில் "Populorum Progression") என்னும் தலைப்பில் 1967, மார்ச்சு 26ஆம் நாள் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார். இம்மடலும் உலக மக்கள் அனைவருக்கும் எழுதப்பட்டதே.

இவ்வாறு, அமைதியின் தேவையை வலியுறுத்திய கத்தோலிக்க திருச்சபை உலக அமைதியை வளர்ப்பதற்கு "உலக அமைதி நாள்" என்றொரு கொண்டாட்டம் பெரிதும் துணையாக அமையும் என்று கருதியது. எனவே, திருத்தந்தை ஆறாம் பவுல் 1967ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 8ஆம் நாள் ஓர் அறிக்கை விடுத்தார். அதில் இனி வருகின்ற ஒவ்வொரு ஆண்டும், சனவரி முதல் நாள் "உலக அமைதி நாள்" (World Day of Peace) என்று உலகம் அனைத்திலும் கத்தோலிக்க திருச்சபையால் கடைப்பிடிக்கப்படும்.என்று அறிவித்தார். அந்த நாளில் உலக மக்கள் அனைவரும் உலக அமைதியை வளர்க்க தங்களையே அர்ப்பணிப்பது சிறப்பு என்றும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு, கத்தோலிக்க திருச்சபையின் "உலக அமைதி நாள்" தோன்றலாயிற்று.

Remove ads

உலக அமைதி நாள் செய்தியின் மையப் பொருள்

உலக அமைதியை வளர்ப்பதற்காக மக்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு உலக அமைதி நாளுக்கும் ஒரு மையப் பொருளை அறிவிப்பது வழக்கம். 1968ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வந்துள்ள உலக அமைதி நாளின் மையப் பொருள் பட்டியல் கீழே தரப்படுகிறது:

திருத்தந்தை ஆறாம் பவுல் வழங்கிய உலக அமைதி நாள் செய்திகள்[3]

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், ஆண்டு ...

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வழங்கிய உலக அமைதி நாள் செய்திகள்[4]

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், ஆண்டு ...

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வழங்கிய உலக அமைதி நாள் செய்திகள்[5]

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், ஆண்டு ...
Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads