எஃப். எக்ஸ். சி. நடராசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஃப். எக்ஸ். சி. நடராசா (21 சூலை 1911 - 16 மார்ச்சு 1997 ) ஈழநாட்டின் யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகரில் தோன்றியவர். மகாவித்துவான் என்றும், எழுத்தாளர் என்றும் பலராலும் அறியப்பட்டவர். இவர் உருவாக்கிய மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
Remove ads
கல்வி
காரைநகர் அம்பலச் சட்டம்பியார், சுளிபுரம் அதிபர். சு. சிவபாதசுந்தரம், காரைநகர் உடையார் நாகலிங்கம், காரைநகர் சபாபதிப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆரம்பத்தில் கற்றார். பின்னர் சுவாமி விபுலானந்தரைக் குருவாகக் கொண்டு பாலபண்டிதம் கற்றார். மட்டக்களப்பு கத்தோலிக்கப் பாடசாலைகளில் ஞானச் சகோதரர்களின் ஆதரவில் வளர்ந்தார். அக்காலத்தில் அருட் சகோதரர் இன்னாசிமுத்து, அருட் சகோதரர் பிலிப்பு ஆகியோரிடமும் கற்க நேர்ந்தது.[1]
Remove ads
எழுதிய நூல்கள்
- மட்டக்களப்பு மான்மியம்
- காரைநகர் மான்மியம்
- ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு
- ஈழத்து நாட்டார் பாடல்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads