நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி (2 பிப்ரவரி 1763 – 16 பிப்ரவரி 1831) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பணியாற்றிய ஆங்கிலேய குடிமுறை அரசுப்பணி அதிகாரியாவார். இவர் 1794-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாளராக அறியப்படுகிறார்.[2]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி இங்கிலாந்தின் நார்ஃபோக் மாகாணத்திலுள்ள கிரேட் யர்மவுத்தில் நேதனியல் கிண்டர்ஸ்லி மற்றும் ஜெமிமா விக்ஸ்டெட் தம்பதியருக்குப் பிறந்தார். இவர் ஹன்னா பட்டர்வொர்த் என்ற பெண்மணியை ஜூலை 3, 1786-இல் மணந்தார். இவரது திருமணம் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள தங்கர்நாயக்புரம் என்ற ஊரில் நடந்தது.[3] இவர்களுக்கு சர் ரிச்சர்ட் டாரின் கிண்டர்ஸ்லி (பிறப்பு: 5 அக்டோபர் 1792; இறப்பு: 22 அக்டோபர் 1879)[4] மற்றும் நேதனியல் வில்லியம் கிண்டர்ஸ்லி (பிறப்பு: 1794; இறப்பு: 3 டிசம்பர் 1844)[5] என்ற இரு மகன்கள் இருந்தனர்.
கிண்டர்ஸ்லி 18 பிப்ரவரி 1831 அன்று தனது 68-வது வயதில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயர் மாகாணத்தில் உள்ள லிட்டில் மார்லோ என்ற ஊரில் இறந்தார்.[6]
Remove ads
படைப்புகள்
நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி 1794-ஆம் ஆண்டில் தனது "ஸ்பெசிமன்ஸ் ஆஃப் ஹிந்து லிட்டரேச்சர்" (Specimens of Hindoo Literature) என்ற நூலில் "வள்ளுவர் குறளின் பகுதிகள் அல்லது, ஞானக் பெருங்கடல்" ("Extracts from the Teroo-Vaulaver Kuddul, or, The Ocean of Wisdom") என்ற அத்தியாயத்தில் முதன்முறையாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதில் குறளின் முதற்பகுதியான அறத்துப்பாலின் முதல் சில அதிகாரங்களை மட்டுமே மொழிபெயர்த்து இருந்தார்.[7]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads