நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி

From Wikipedia, the free encyclopedia

நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி
Remove ads

நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி (2 பிப்ரவரி 1763 – 16 பிப்ரவரி 1831) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பணியாற்றிய ஆங்கிலேய குடிமுறை அரசுப்பணி அதிகாரியாவார். இவர் 1794-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாளராக அறியப்படுகிறார்.[2]

விரைவான உண்மைகள் நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி இங்கிலாந்தின் நார்ஃபோக் மாகாணத்திலுள்ள கிரேட் யர்மவுத்தில் நேதனியல் கிண்டர்ஸ்லி மற்றும் ஜெமிமா விக்ஸ்டெட் தம்பதியருக்குப் பிறந்தார். இவர் ஹன்னா பட்டர்வொர்த் என்ற பெண்மணியை ஜூலை 3, 1786-இல் மணந்தார். இவரது திருமணம் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள தங்கர்நாயக்புரம் என்ற ஊரில் நடந்தது.[3] இவர்களுக்கு சர் ரிச்சர்ட் டாரின் கிண்டர்ஸ்லி (பிறப்பு: 5 அக்டோபர் 1792; இறப்பு: 22 அக்டோபர் 1879)[4] மற்றும் நேதனியல் வில்லியம் கிண்டர்ஸ்லி (பிறப்பு: 1794; இறப்பு: 3 டிசம்பர் 1844)[5] என்ற இரு மகன்கள் இருந்தனர்.

கிண்டர்ஸ்லி 18 பிப்ரவரி 1831 அன்று தனது 68-வது வயதில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயர் மாகாணத்தில் உள்ள லிட்டில் மார்லோ என்ற ஊரில் இறந்தார்.[6]

Remove ads

படைப்புகள்

நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி 1794-ஆம் ஆண்டில் தனது "ஸ்பெசிமன்ஸ் ஆஃப் ஹிந்து லிட்டரேச்சர்" (Specimens of Hindoo Literature) என்ற நூலில் "வள்ளுவர் குறளின் பகுதிகள் அல்லது, ஞானக் பெருங்கடல்" ("Extracts from the Teroo-Vaulaver Kuddul, or, The Ocean of Wisdom") என்ற அத்தியாயத்தில் முதன்முறையாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதில் குறளின் முதற்பகுதியான அறத்துப்பாலின் முதல் சில அதிகாரங்களை மட்டுமே மொழிபெயர்த்து இருந்தார்.[7]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads