எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியின் எமனேசுவரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[2][3]

விரைவான உண்மைகள் எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 89 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9.5464°N 78.6006°E / 9.5464; 78.6006 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் பெருந்தேவி ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் அரசமரம்; தீர்த்தம் வைகை ஆகும். பாஞ்சராத்ரம் முறைப்படி இக்கோயிலில் பூசைகள் நடத்தப்படுகின்றன. கருவறை விமானம் புண்ணியகோடி விமானமாகும். வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், சீனிவாசப் பெருமாள், அலர்மேல்மங்கை தாயார், சக்கரத்தாழ்வார் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4] கோயில் கும்பாபிசேகம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி ஆறாம் நாள் நடைபெற்றது.[5] வைகாசி பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads