கபிலபரணர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவபெருமான் திருஅந்தாதி என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடிய கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் என்னும் சைவ சமய நண்பர்களைக் குறிக்கக் கபிலபரணர் என்னும் தொடரை முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர். இருவரும் புலவர்கள். இவர்கள் சங்கநூல் பாடல்களைப் பாடிய கபிலரோ, பரணரோ அல்லர். பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள். கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் எனக் குறிப்பிடப்படுபவர்கள். இருவருமே சிவபெருமான் திருஅந்தாதி என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடியவர்கள்.
- கபிலதேவ நாயனார் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருஅந்தாதி ஆகிய மூன்று நூல்களைப் பாடியவர்.
- பரணதேவ நாயனார் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள சிவபெருமான் திருஅந்தாதி பாடியவர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads