கர்ண பருவம்

From Wikipedia, the free encyclopedia

கர்ண பருவம்
Remove ads

கர்ண பருவம் மகாபாரதத்தின் எட்டாவது பருவம் ஆகும். போரில் கர்ணன் கௌரவப் படைகளுக்குத் தலைமை தாங்கிய காலப்பகுதியின் நிகழ்வுகள் இப்பருவத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன. கர்ணன் படைத் தலைவனாகப் பொறுப்பு ஏற்பது, மதுராவின் மன்னன் சல்லியன் கர்ணனுக்குத் தேரோட்டியாவது, கர்ணனும் சல்லியனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பாண்டியனும், தண்டசேனன், தார்தா ஆகியோரும் போரில் மடிவது, கர்ணன் தருமனுடன் போர் புரிவது போன்ற நிகழ்வுகள் இப்பருவத்தில் நிகழ்வனவாகும்.

Thumb
கர்ணன் இறப்பு

துரியோதனனின் தம்பியான துச்சாதனனின் மார்பைக் கிழித்து இரத்தத்தைக் குடிப்பதன் மூலம் பீமன் தனது சபதத்தை நிறைவேற்றிக் கொள்வதும் இப்பருவத்திலேயே ஆகும். இறுதியாக அருச்சுனன் கர்ணனுடன் போர் புரிவதும், அருச்சுனன் கர்ணனைக் கொல்வதும் இப்பருவத்தின் இறுதிப்பகுதியில் வருகின்றன. 69 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ள இப்பருவத்தில் 4964 பாடல்கள் உள்ளன.[1]

Remove ads

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads