கவுரியர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கவுரியர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும்.
கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள்.[1] கவவு என்னும் சொல் 'வளைத்துத் தன்னகத்தே வைத்துக்கொள்ளும்' பொருளையும் உணர்த்தும்.[2]
இராமன் இலங்கை வெற்றிக்குப் பின் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு மறை ஓதி வழிபட்ட கோடி [3] [4] கவுரியர் எனப் பெயர் பூண்ட பாண்டியரின் தலைமை இடமாகும்.[5]
கவுரியர் நன்னாடு என்பது பாண்டியநாடு. அந்நாட்டிலுள்ளது அருவி கொட்டும் மலைப்பிளவு. [6] அப்பகுதி அரசன் தென்னன்.[7]
கவுரியர் மதி போன்ற வெண்கொற்றக் குடையின் நிழலில் நிலப்பரப்பை யெல்லாம் காப்பேன் என முரசு முழக்கிக்கொண்டு தன் ஆணைச் சக்கரத்தை உருட்டுகையில் ஈகைப் பாங்கைத் தவிராது கடைப்பிடித்து வந்தார்களாம். இவர்களின் மரபு வழியில் வந்தவனாம் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி.[8]
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads