காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் (விசுவநாதேசம்) எனப் பெயர்பெற்ற இது, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது, சர்வ தீர்த்தம் (குளத்தின்) மேற்குகரை மண்டபமாக தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.[1]
Remove ads
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: காசி விசுவநாதர்.
தல வரலாறு
- உலகில் உள்ள சிவ தலங்கள் எல்லாம் சூக்குமமாகப் பொருந்தியிருக்கும். அத்தலம் காசி விசுவநாதரும் காசியிலும் காஞ்சி சிறந்ததென்று வந்து தங்கியதாகும். இவ்விடத்தில் முக்தி மண்டபம் ஒன்று உள்ளது. அவ்விறைவனை வணங்கி அம்முக்தி மண்டபத்தைக் கண்டவர்கள் முக்தராவார்கள் என்பது வரலாறு.[2]
- காஞ்சியின் மேன்மையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு, காசி விசுவநாதப் பெருமான் இங்கு வந்து தங்கியதாக சொல்லப்படுகிறது.[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் வேலூர் செல்லும் சாலையிலுள்ள சர்வதீர்த்தத்தின் (குளத்தின்) மேற்கு கரையில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சி கச்சபேசுவரர் கோயிலின் வழியாக காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads