காந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்தன் புகார் நகரத்தில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட சோழப் பெருவேந்தன். பரசுராமன் மன்னர் என்று யார் இருந்தாலும் அவர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருந்தான். அவனுக்குப் பயந்து காந்தன் மாறுவேடத்தில் இருந்தான். அந்தக் காலத்தில் சோழநாட்டை ஆளும் உரிமையை ககந்தனிடம் ஒப்படைத்திருந்தான். இந்தக் ககந்தன் என்பவன் காந்தனுக்கும் கணிகை ஒருத்திக்கும் பிறந்த மகன். அரசாளும் உரிமை இல்லாதவன். அதனால் இவனைப் பரசுராமன் கொல்லமாட்டான். [1]
இந்தக் ககந்தனின் மகன் மருதி (பார்ப்பினி) என்பவளைத் தன் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தான். [2] மருதி கற்புடையவள். இதனை அறிந்த ககந்தன் தன் மகனை வேட்டி வீழ்த்தினான் என்று மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது. [3]
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads