கா. பாலதண்டாயுதம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கா. பாலதண்டாயுதம் (K. Baladhandayutham) தோழர் பாலதண்டாயுதம் அல்லது கம்யூனிஸ்ட் தண்டாயுதம் என்றும் அழைக்கபெற்றார். (ஏப்ரல் 2, 1918 - மே 31, 1973) என்பவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் மாக்கினம்பட்டி கிராமத்தினைச் சார்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற 5வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமையகம், பாலன் இல்லம் என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]
1973 மே 31 அன்று 55 வயதில் இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 விமான விபத்தில் இவர் இறந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads