கொடுக்காப்புளி செல்வராஜ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொடுக்காப்புளி செல்வராஜ் (இறப்பு: சூன் 12, 2014, அகவை 56) தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். மேடை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.[1]
கொடுக்காப்புளி செல்வராஜின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஆகும். சென்னை அருகேயுள்ள மாங்காடு பகுதியில் வசித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர், துணை நடிகர் ஏஜெண்டுகளின் தலைவராகவும் இருந்தார்.[2] இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.
Remove ads
நடித்த படங்கள்
- பாட்டி சொல்லைத் தட்டாதே
- அரண்மனைக் கிளி
- அண்ணா நகர் முதல் தெரு
- உதயகீதம்
- கரகாட்டக்காரன்
- எங்க ஊரு பாட்டுக்காரன்
- பொங்கி வரும் காவேரி
- லொள்ளு தாதா பராக் பராக்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads