கோட்டியூர் நல்லந்தையார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோட்டியூர் நல்லந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது.[1]

பெயர் விளக்கம்

அந்துவன் என்பது ஆண்பால் பெயர். அதன் பெண்பால் பெயர் அந்தை.

பாடல் சொல்லும் செய்தி

தலைவனுக்கும் தலைவிக்கும் தொடர்பு. திருமணம் பற்றிப் பேச்சே எழவில்லை. தலைவி மருண்டுபோயிருக்கிறாள். ஆண் இறால் மீனைப்போல மருண்டுபோயிருக்கிறாள். இறால் ஏன் மருண்டது? கருங்கால் குருகு ஒன்று பற்றும்போது தப்பிப் பிழைத்துத் தாழை மரத்துக்கடியில் ஒண்டியது. அங்கே இருந்த தாழம்பூவைப் பார்த்து இதுவும் குருகோ என எண்ணி மருண்டுகொண்டிருந்தது. அந்தக் குருகு மருள்வது போலத் தலைவி மருள்கிறாளாம்.

மேற்கோள் குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads