கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் (Kotputli-Behror district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2][3][4]இதன் தலைமையிடமாக கோட்பூத்லி-பெக்ரோர் நகரங்கள் உள்ளது. இம்மாவட்டத்தின் அருகில் செய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்கள் உள்ளது.
இம்மாவட்டம் இராஜஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் முப்புறங்களில் ஆரவல்லி மலைத்தொடர் சூழ்ந்துள்ளது. இதன் வடக்கில் அரியானா மாநிலம் உள்ளது. இம்மாவட்டத்தில் சபி ஆறு பாய்கிறது.
Remove ads
மாவட்ட நிர்வாகம்

கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- கோட்பூத்லி
- பெக்ரோர்
- விராட்நகர்
- பன்சூர்
- நீம்ரானா
- மந்தன்
- நாராயண்பூர்
- பௌதா
போக்குவரத்து
தில்லி-ஜெய்ப்பூர்-மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 79 மற்றும் தில்லி-மும்பை-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
