கோலாகலம் (இராகம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோலாகலம் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), பஞ்சமம் (ப), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்:ச ப ம131 ப த2நி3
அவரோகணம்:ச நி32ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூர்ணச" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் மத்திமம், பஞ்சமம் என்பன ஒழுங்கு மாறி வருவதால் இது இருசுர வக்கிர இராகம் ஆகும்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads