கோ. சுந்தர்ராஜன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோ. சுந்தர்ராஜன் (ஆங்கிலம்: G. Sundarrajan) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராவார். இவர் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.[1][2]
Remove ads
இளமைக் காலம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[3] 1980களில் பூவுலகின் நண்பர்கள் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்.
நீதிமன்ற வழக்குகள்
- 2012 இல் கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இவர் தொடுத்த வழக்கில் அணுக்கழிவுகளைக் கையாளுவது தொடர்பாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் அறிவித்தது.[4]
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிபுணத்துவமற்ற உறுப்பினரை நியமிப்பதை எதிர்த்து வழக்கு தொடுத்தார்.[5]
- சென்னை சேலம் பசுமை விரைவுச் சாலை திட்டத்தின் போது நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தை மீறியதாக வழக்குத் தொடுத்தார் ஆனால் நிதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.[6]
- 2018 இல் தேனி நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி தவறு என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.[7]
Remove ads
எழுதிய நூல்கள்
- சசாகியின் காகிதக் கொக்கு (2015)
- அணுவுலை தேசம் (2017)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads