சக்கர வியூகம்
போர் வியூகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்கர வியூகம் அல்லது பத்ம வியூகம் என்பது பழங்கால இந்து சமய போர்முறைகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர் வியூகமாகும். இது ஒரு சுழலும் மனித மரண இயந்திரமாக கருதப்படுகிறது.[1] வெவ்வேறு அளவுகளினால் ஆன ஏழு வட்ட சக்கரங்களால் சக்கர வியூகம் அமைக்கப்படுகிறது. இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜூனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார்.

மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகம் மூன்று முறை அமைக்கப்பட்டதாகவும், இரு முறை அர்ஜூனன் இதை உடைத்து வெற்றிபெற்றதாகவும், ஒரு முறை இந்த சக்கர வியூகத்தினை அபிமன்யூ உடைத்து சென்று, பின்பு வெளியேற தெரியாமல் மாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads