சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம்
இலங்கை மூதவையின் உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேர் சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம் (Sangarapillai Pararajasingam, பி25 சூன் 1896 - ) மூதவை உறுப்பினராகவும் இருந்தவர்.
Remove ads
இளமைக் காலம்
பரராஜசிங்கம் 1896 சூன் 25 இல் ஏ. வி. சங்கரப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] தந்தை மானிப்பாய் இந்துக் கல்லூரியை நிறுவியவர்..[1] பரராஜசிங்கம் கொழும்பு கல்கிசையில் உள்ள புனித தோமையர் கல்லூரியிலும், பின்னர் உவெசுலி கல்லூரியிலும் கல்வி கற்றார்.[1] இவர் சேர் பொன். அருணாசலத்தின் மகள் பத்மாவதி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1]
பணி
பரராஜசிங்கம் வோல்கார்ட் பிறதர்சு நிறுவனத்தின் தரகராகப் பணியாற்றினார்.[1] இவர் முதலீட்டாளர்கள் சபையின் தலைவராகவும், விவசாய, தொழிற்சாலை கடன் வழங்குவோர் திணைக்களம், இலங்கை தென்னை சபை, இலங்கை அறிவியல், தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் குழும உறுப்பினராகவும் இருந்தார்.[1]
பிற்கால வாழ்க்கை
பரராஜசிங்கம் 1954 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1] இலங்கையின் வேளாண்மைத் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக 1955 ஆம் ஆண்டில் சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads