சஞ்சய் பாட்டியா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சஞ்சய் பாட்டியா (Sanjay Bhatia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1967 ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டில் பானிபத்து நகராட்சிக் குழுவின் தலைவராக இருந்தார். அரியானா மாநில அரசியலில் பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாகச் செயல்பட்டார். 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரியானாவின் கர்னால் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பாரதிய சனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகவும்[3][4] அரியானா காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads