சாந்தகுமாரி சிவகடாட்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தகுமாரி சிவகடாட்சம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இவர் எழுதிய பயணக் கட்டுரைகள் பல அச்சிதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இவர் எழுதிய “சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
கலைமாமணி விருது
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையால் வழங்கப்பட்டு வரும் கலைமாமணி விருதுக்கு, இயல் பிரிவில் 2022 ஆண்டுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். [1]
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads