சாந்தி சுவரூப் பட்நாகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். எஸ் பட்நாகர் என்றறியப்படும் சாந்தி சுவரூப் பட்நாகர்(Sir Shanti Swaroop Bhatnagar:[] Error: {{Lang-xx}}: no text (help), OBE, FRS, 21 பிப்ரவரி, 1894 – 1 ஜனவரி, 1955) ஒரு நன்கறியப்பட்ட இந்திய இயற்பியலாளரும் அறிவியலறிஞரும் ஆவார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு அமைக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் முதல் இயக்குநராக பணியாற்றியவர். 1894 இல் தற்போது பாகிஸ்தானிலுள்ள ஷாப்பூர் எனுமிடத்தில் பிறந்தவர். ஓர் ஆங்கிலேய நிறுவனம் எண்ணெய்க் கிணறு தோண்டும்போது ஏற்பட்ட தொழில் நுட்பச் சிக்கலை எளிய முறையில் தீர்த்து வைத்தவர். இந்தியாவில் ஆய்வு மையங்கள் தோன்றக் காரணமானவர். பெட்ரோலியக் கழிவுகளைப் பயன்படு பொருளாக மாற்றுவதற்கு வழிமுறைகள் கண்டறிந்தவர். இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றவர். இவருடைய பெயரால் சாந்தி சுவரூப் பட்நாகர் விருது வழங்கப்படுகிறது.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads