சிங்கவரம் குடைவரை
குடைவரைக் கோயில் (விழுப்புரம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்கவரம் குடைவரை, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் உள்ள சிங்கவரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயில். இதை "அரங்கநாதன் குடைவரைக் கோயில்" எனவும் அழைப்பர்.
அமைப்பு
இக்குடைவரையின் மண்டபத்தில் இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களோடு ஒட்டியவாறு இரண்டு அரைத்தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் மேலும் கீழும் சதுர வெட்டுமுகத்துடனும், நடுப்பகுதி எண்பட்டை வடிவிலும் அமைந்துள்ளன. இத்தூண்களில் தாமரைச் சிற்ப வடிவங்கள் உள்ளன.[1] இவற்றின் மேல் போதிகை, உத்தரம் ஆகிய உறுப்புக்களும் காணப்படுகின்றன. தூண் வரிசைக்கு இருபுறமும் முகப்புப் பகுதியில் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் பின்புறம் அதன் முழு அகலத்துக்குக் கருவறை உள்ளது. இக்கருவறையுள் கிடந்த நிலையில் திருமாலின் உருவம் "பள்ளிகொண்ட பெருமான்" வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
காலம்
இக்குடைவரையில் உள்ள வாயிற்காவலர் சிற்பங்கள் போன்றவை மகேந்திரவர்மன் காலத்தவை எனக்கருதும் துப்ராயல், சிங்கவரம் (சிங்கபுரம்) சிம்மவிட்டுணுவால் நிறுவப்பட்டது என்றும், அதனால் இக்குடைவரை சிம்மவிட்டுணு காலத்தில் குடையப்பட்டது என்றும் கருதுகிறார்.[3] எனினும் இது பரமேசுவரவர்மன் காலத்தைச் சேர்ந்தது எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads