சிந்தாதிரிப்பேட்டை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிந்தாதிரிப்பேட்டை (ஆங்கிலம்: Chintadripet) சென்னையின் மையப்பகுதியாகும். இந்தப் பகுதியில் சொற்பமான அளவில் நெசவாளர்கள் வசித்து வந்தனர். தறி கொண்டு நெசவு தொழில் செய்து வந்த இப்பகுதி சின்ன தறிப்பேட்டை (தறி- நெசவு செய்யப் பயன்படும் கருவி) என்று அழைக்கப்பட்டு வந்தது. அதுவே பேச்சு வழக்கில் மறுவி சிந்தாதிரிப்பேட்டை ஆகிவிட்டது.


Remove ads
பூங்கா
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்கா 14.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முதலில் இப்பூங்கா நேப்பியர் பூங்கா என்று அழைக்கப்பட்டது. இப்பூங்காவில் மே தினத்தன்று சிறப்பு மேடைப் பேச்சுக்கள் இடம் பெறும். மே தினப் பூங்கா செப்டம்பர் 13, 1950இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads