சிவப்பா நாயக்கர்
இந்திய ஆட்சியாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவப்பா நாயக்கர், கேளடியை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார்.[1] இவர் கி.பி 1645 தொடக்கம் 1660 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.[2] இவர் சிறந்த நிர்வாகத் திறமையும் போர்த் திறமையும் பெற்று விளங்கியவர்.[3]
Remove ads
வெற்றிகள்
வேலூரில் இருந்து ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் ஸ்ரீரங்கா பீஜப்பூர் சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டு சிவப்பாவிடம் அடைக்கலம் புகுந்தார்.[4] இதன் காரணமாக பிஜாப்பூர், கோல்கொண்டா சுல்தான்களோடு போர் புரிந்து தார்வாடு பகுதியை கைப்பற்றினர். மங்களூர், குந்தாபுரா, ஹொன்னாவர் போன்ற கடலோரப் பகுதியில் உள்ள போர்த்துகீசிய துறைமுகங்கள் கைப்பற்றி கர்நாடக பகுதியில் உள்ள போர்த்துகீசிய அரசியல் அதிகாரத்தை அழித்தார்.[5]
Remove ads
கட்டிடக்கலை
சிவப்பா நாயக்கரால், சந்திரகிரி, பேக்கல், மங்களூர், ஆரிக்கடி மற்றும் அட்கா பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டன.


மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads