சிவரஞ்சனி
கருநாடக சங்கீதத்தில் இருபத்தோராவது மேளகர்த்தா இராகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவரஞ்சனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
ஆரோகணம்: | ச ரி2 க2 ப த2 ச் |
அவரோகணம்: | ச் த2 ப க2 ரி2 ச |
- இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ" இராகம் எனப்படுகின்றது.
- மத்திமம், நிஷாதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
- இவ்விராகத்தின் ரிஷப, காந்தார மூர்ச்சனைகளே முறையே ரேவதி, சுநாதவினோதினி ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads