சீயகங்கன்
மேலைக்கங்க சிற்றரசன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமராபரணன் சீயகங்கன் (இயற் பெயர் : திருவேகம்பமுடையான்) எனபவர் கங்கர் பரம்பரையில் வந்த ஓர் அரசன். சங்க காலக் கங்கன் வழியில் வந்த மேலைக் கங்கர் மரபினர் ஆவார். இவர் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்தார். இவரது தலைநகரம் அக்காலத்தில் குவளாலபுரம் என்று அழைகபட்ட தற்கால கோலார் நகரமாகும். கங்கர் சமண மதத்தினர். சீயகங்கன் நன்னூல் என்னும் இலக்கண நூல் தோன்றக் காரணமாக இருந்தவன். நன்னூல் இயற்றிய ஆசிரியர் பவணந்தி முனிவரையும், இந்தப் பவணந்தியார் காலத்திலேயே நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதரையும் பேணிப் பாதுகாத்தவன்.
இவனது மெய்க்கீர்த்தி இவனை அமராபரணன், ஸ்ரீமத் குவளாலபுர பரமேசுரன் [1] கங்க குலோற்பவன், சூரநாயகன் என்றெல்லாம் பாராட்டுகிறது. இவனுக்குத் திருவேகம்பமுடையான் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிவிக்கிறது. [2]
சீயகங்கன் மதுராந்தகப் பொத்தம்பிச் சோழனின் மைத்துனன். (மனைவியின் உடன்பிறப்பு). [3]
Remove ads
குடும்பம்
அமராபரணன் சீயகங்கனின் மனைவியின் பெயர் அரிய பிள்ளை ஆகும். சீயகங்கனுக்கு அருங்குன்றைப் பிள்ளையாரான செயகங்கன் (சீயகங்கன்) என்ற மகனும், வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார் என்ற மகளும் இருந்தனர்.[4]
கருவிநூல்
- நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன் அவரது மகன் கலியாண சுந்தரையர் பதிப்பு, 1946 டி. ஏ. கோபிநாதையர் 'செந்தமிழ்' இதழ் நான்காம் தொகுதி மேற்கோள்.
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்புகள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads