சிவானந்தர்

From Wikipedia, the free encyclopedia

சிவானந்தர்
Remove ads

சிவானந்த சரசுவதி (Sivananda Saraswati) அல்லது சுவாமி சிவானந்தர் (Swami Sivananda); 8 செப்டம்பர் 1887 – 14 சூலை 1963) ரிசிகேசத்தில் வாழ்ந்த ஓர் இந்து சமய அத்வைத வேதாந்த குரு ஆவார். அவர் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

விரைவான உண்மைகள் சிவானந்த சரசுவதி Sivananda Saraswati, பிறப்பு ...

மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில ஆண்டுகளில் ஆன்மிக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திருப்பிக் கடுமையான தவத்திற்குப் பிறகு ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக் கழகம் என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மிக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துகளைச் சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுபயணங்கள் மூலமாகவும் பரப்பினார்.[1][2][3]

சுவாமி சிவானந்தர் நிறுவிய தெய்வ நெறிக் கழகம், சுவாமி விட்டுச் சென்ற ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads