சென்னசந்திரம், ஒசூர்
கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்னசந்திரம் (Chennasandiram) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
ஒசூர் நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த ஊரும் இந்த ஊர் அடங்கிய சென்னசந்திரம் ஊராட்சியும் ஒசூர் நகராட்சியுடன் 2019ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது.[1]
Remove ads
அமைவிடம்
சென்னசந்திரமானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 90 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 365 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 175 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 190 என்றும் இருந்தது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 56.71% என்று இருந்தது.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads