சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில்
Remove ads

ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்பது சென்னை பாரிமுனையில் (ஜார்ஜ டவுன்), உள்ள சிவன் கோவிலாகும்.

விரைவான உண்மைகள் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவில், அமைவிடம் ...
Remove ads

இருப்பிடம்

இக்கோயில் சௌகார்பேட்டை தங்கசாலை என்ற மிண்ட் சாலையில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்தும் பாரிமுனையிலிருந்தும் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றி இரண்டு சமண ஆலயங்களும் கந்தசாமி கோயிலும் உள்ளன.[1]

வரலாறு

ஏகாம்பரேஸ்வரர் கோயில் 1680 களில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் துபாஷ் பணியாளரான அலங்கநாத பிள்ளை அவர்களால் கட்டப்பட்டது.[1] இந்த கோயில் மெட்ராஸ் நகரத்தின் 1710 வரைபடத்தில் "அல்லிங்கள் பகோடா" என்று குறிக்கப்பட்டுள்ளது.[2]

கோயில் அமைப்பு

இக்கோவிலில் மூலவராக ஏகாம்பரநாதரும், அம்மனாக காமாட்சியும் உள்ளனர். இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இந்தத் தலம் நவகிரக பரிகாரத்தலமாகவும் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் நம்பப்படுகிறது.[3] காமிகம் ஆகமப்படி உள்ளக் கோவிலின் தலவிருட்சமாக மாமரம் உள்ளது.[4] திரிதள விமானமும் ஏழு நிலை இராஜகோபுரமும் கொண்டுள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விழாக்கள்

இக்கோயிலில் ஐப்பசி மாதம் பூர நட்சத்திர தினத்தன்று நிகழும் திருக்கல்யாண விழா விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads