சென்னை மெட்ரோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன. மேல்வாரியாக, இத்திட்டம் "சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை" ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் தில்லி மெற்றோ திட்டத்தை ஒத்திருக்கும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையினை வழங்குகின்றன.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் (CMRL), இந்தியாவின் சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதியளவில் திறந்த பின்னர், 2015 ஆம் ஆண்டில் கணினி முறைமை வருவாயைத் தொடங்கியது. இதில் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளம் கொண்ட இரண்டு வண்ண வழித்தடங்கள் உள்ளன. சென்னை மெட்ரோ, தில்லி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ மற்றும் ஐதராபாத் மெட்ரோ ஆகியவற்றிற்கு பிறகு இந்தியாவில் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பாகும். சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் (CMRL), இந்தியாவிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் சென்னை மெற்றோ உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நிலத்தடி மற்றும் உயர்ந்த நிலையங்களின் கலவையாகும். மேலும் நிலையான பாதையினைப் பயன்படுத்துகிறது. சேவைகள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாறுபடும். சேவையானது 06:00 முதல் 22:00 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்குகின்றன. இந்த ரயில்களில் எதிர்காலத்தில் 6 நீட்டிக்கக்கூடிய நீளமான நான்கு பயிற்சியாளர்கள் உள்ளன.
சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஜூன் 29, 2015 அன்று அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை மெட்ரோவின் முதல் ஓட்டுநர் என்ற பெருமையை ப்ரீத்தி என்ற பெண் ஓட்டுநர் பெற்றார்.[2]
Remove ads
வரலாறு
புது தில்லியில் கட்டப்பட்ட மெட்ரோவின் வெற்றியில் உந்தப்பட்டு, அதேபோல ஒரு பொதுப்போக்குவரத்துத் திட்டத்தை சென்னையிலும் செயலாக்கும் விதமாக, தில்லி மெட்ரோ இருப்புவழி கழகத்தின் தலைவர், திரு. ஈ. ஸ்ரீதரன், திட்டவரைவினை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் அளித்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டு, பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற மு. கருணாநிதியால் மீண்டும் எடுக்கப்பட்டு, கோயம்பேட்டில் 2009ஆம் ஆண்டு ஜீன் 10 நாளன்று அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பின் செயல் வடிவம் கொடுக்கப்பட்டு, தற்போது இரண்டு வழித்தடங்கள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதோடு, விரிவாக்கப்ப பணிகளும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
தமிழ்நாட்டின் 2007-2008 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மெற்றோ தொடருந்துத் திட்டம் உள்ளடக்கப்பட்டது. அப்போது, விரிவான திட்ட அறிக்கையை ஆயத்தம் செய்ய தமிழக அரசு சார்பில், இத்திட்டத்திற்கான தொடக்க நிதியாக ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டது. மெற்றோபணிகளுக்காக, தமிழக அமைச்சரவை, நவம்பர் 7, 2007 அன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கென ”சென்னை மெற்றோ இருப்புவழி லிமிட்டெட்" என்ற நிறுவனத்தை அரசு நிறுவியது.
Remove ads
திட்ட மதிப்பீடு
2007ஆம் ஆண்டில், இத்திட்டம் வரையப்பட்டபோது, இதன் மதிப்பீடு 9565 கோடியாக இருந்தது. தற்போது இத்திட்டத்திற்கான முதல் கட்டத்திற்கு தோராயமான மதிப்பீடு, சற்றொப்ப 14,600 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
திட்ட நிதி
நடுவண் அரசும், தமிழக அரசும், இத்திட்டத்திற்கு நிதி பங்களிக்க முன்வந்தன. மேலும், ஜப்பானிய வங்கியொன்றும் இத்திட்டத்திற்குப் பங்களித்துள்ளது.
முதல் கட்டம்
திட்ட விரிவறிக்கையின்படி, முதல் கட்டத்தில் இரண்டு மெற்றோ இருப்புவழிகள் அமைக்கப்பட்டன.
வழித்தடங்கள் வரைபடம்:
Remove ads
இரண்டாம் கட்டம்
இரண்டாம் கட்ட திட்டத்தில் மூன்று மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கபட உள்ளது:
வெளியிணைப்புகள்
- Chennai Metro Rail is Rs. 6000 crore costlier(ஆங்கில மொழியில்)
- பேஸ்புக்கில் சென்னை மெட்ரோ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads