சேசம்பட்டி சிவலிங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேசம்பட்டி சிவலிங்கம் (பிறப்பு: 7 ஜுலை 1944) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்[1].
இசைப் பயிற்சி
நாதசுவரம் வாசித்தலில் ஆரம்பகாலப் பயிற்சியினை தனது தந்தையார் சேசம்பட்டி பி. தீர்த்தகிரியிடம் பெற்றார். பின்னர் கீவளுர் கணேசன், கீரனூர் ராமசுவாமி பிள்ளை ஆகியோரின் மாணவராக இசைக் கற்றார். டி. எஸ். லட்சப்பப் பிள்ளை, டி. என். கிருஷ்ணன், எம். தியாகராஜன், கே. வி. நாராயணசுவாமி ஆகிய புகழ்பெற்ற கலைஞர்களின் தொடர்பினால் தன்னுடைய இசைத்திறனை மேம்படுத்திக் கொண்டார்.
இசைப் பணி
அனைத்திந்திய வானொலியில் ‘A' தரக் கலைஞராக 40 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பெற்றுள்ள விருதுகளும், பட்டங்களும்
- கலைமாமணி விருது (1992 - 1993)
- சங்கீத நாடக அகாதமி விருது, 2011 [2]
- பாபநாசம் சிவன் விருது (2003); வழங்கியது: கர்நாடக சங்கீத சபா
- சங்கீத கலா சிரோமணி
- சங்கீத சேவா நியரதா
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads