ஜக் மந்திர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜக் மந்திர் ஆனது பிசோலா ஏரியில் உள்ள தீவில் கட்டப்பட்டுள்ள அரண்மனை. இது ஏரி தோட்ட அரண்மனை (Lake Garden Palace) எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் அமைந்துள்ளது. இதைக் கட்டியவர்கள் மேவார் ராச்சியத்தின் மூன்று மகாராணாக்களாகிய சிசோடியா ராஜபுதின மன்னர்கள். இந்த அரண்மனையின் கட்டுமானம் 1551ல் மகாராணா அமர் சிங் ஆரம்பித்தார். பின்னர் மகாராணா கரன் சிங் (1620–1628) தொடர்ந்து கட்டினார், இறுதியில் மகாராணா ஜகத் சிங் I (1628–1652) கட்டி முடித்தார். முந்தைய மகாராணா ஜகத் சிங்கை கவுரவிக்கும் விதமாக ஜகத் மந்திர் என பெயரிடப்பட்டது. இவ்வரண்மனையை மன்னர் குடும்பத்தினர் கோடை வாசத்தலமாகவும், விருந்து கொடுக்கவல்ல சொகுசு அரண்மனையாகவும் பயன்படுத்தினர்.[1][2][3][4][5][6]இந்த அரண்மனை இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் புகலிடம் கோருவோருக்கு அடைக்கலம் அளித்துள்ளது.[1][7]
Remove ads
படத்தொகுப்பு
- ஜக் மந்திரின் வான் காட்சி
- ஜக் மந்திர் அரண்மனையின் சித்திரம், 1829
- ஜக் மந்திர் அரண்மனையின் முழுக்காட்சி, 1910
- குல் மஹால் பின்புலத்துடன் ஜக் மந்திரின் அண்மைக் காட்சி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads