ஜி. ஏ. சந்திரசிறி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜி. ஏ. சந்திரசிறி (Major General G. A. Chandrasiri, பிறப்பு: 1954) இலங்கையின் படைத்துறைத் தளபதியும் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக முன்னாள் பொறுப்பதிகாரியும், இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவின் முன்னாள் தலைவரும், ஆவார். இவர் தற்போது வட மாகாண ஆளுனராகப் பணியாற்றுகிறார்.[1]
சந்திரசிறி 1974 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தில் இணைந்தார். 1976 இல் இவர் இலங்கை கவச வாகன அணியில் இரண்டாம் லெப்டினண்டாகச் சேர்ந்தார். பிரிகேடியராகத் தரம் உயர்த்தப்பட்டார். மன்னாரில் பணியாற்றிய பின்னர் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் (2008-2009) யாழ்ப்பாணத் தலைமையகப் பொறுப்பதிகாரியாக இருந்தார். 2009 இல் இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர் வட மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads