ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்
Remove ads

ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம் (Jayashankar Bhupalpally district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [2][3][4] இம்மாவட்டம் நவம்பர் 2016-இல் வாரங்கல் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்டது. [5]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பூபாலபள்ளி நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம், நாடு ...
Thumb
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டத்தின் வரைபடம்
Thumb
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டத்தின் வருவாய்க் கோட்டங்கள்
Thumb
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
Remove ads

புவியியல்

ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டம் 6,175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [6]இம்மாவட்டத்தின் வடக்கில் மகாராட்டிராவின் கட்சிரோலி மாவட்டமும், வடகிழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டமும், கிழக்கில் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டமும், தெற்கில் மகபூபாபாத் மாவட்டமும், மேற்கில் வாரங்கல் கிராமபுற மாவட்டம் மற்றும் பெத்தபள்ளி மாவட்டங்களும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் மக்கள் தொகை 7,50,000 ஆக உள்ளது. [6]

மாவட்ட நிர்வாகம்

ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டம், பூபாளபள்ளி மற்றும் முலுக் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய்க் கோட்டங்களையும், 15 மண்டல்களையும் கொண்டுள்ளது.

வருவாய் வட்டங்கள்

ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்;[7]

மேலதிகத் தகவல்கள் #, பூபாலபள்ளி வருவாய் கோட்டம் ...

சட்டமன்றத் தொகுதிகள்

இம்மாவட்டம் பூபாளபள்ளி, மந்தனி, முலுக் (தனி) என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads