ஜெரமி பெந்தாம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெரமி பெந்தாம் அல்லது ஜெரமி பெந்தம் (Jeremy Bentham: 15 பெப்ரவரி 1748 – 6 சூன் 1832) ஓர் பிரித்தானியத் தத்துவவியலாளர்; அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்,[1][2] சமூக சீர்திருத்தவாதி. இவருடைய பயன் கருதுக் கோட்பாடு மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] இவர் 'அரசியல் தந்திரங்கள்', 'பன்னாட்டுச் சட்டத்தின் கொள்கைகள்', 'அரசியலமைப்புத் தொகுப்பு', 'இங்கிலாந்தின் தேவாலயம்' ஆகிய புகழ்பெற்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
Remove ads
விலங்குரிமை
விலங்குரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களில் தனது காலகட்டத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஜெரமி பெந்தாம். ஒரு விலங்கின் நலத்தேவைகளைக் கருத்தில் கொள்ளும்போதெல்லாம் அங்கு தார்மீக ரீதியில் பொருத்தமாக அமைவது அவ்விலங்கின் பகுத்தறியும் திறன் அல்ல எனறும் மாறாக அது அவ்விலங்கின் துன்பத்தை அனுபவிக்கும் திறனேயாகும் என்று பெந்தாம் வலியுறுத்துகிறார்.[4]:309n தனது ஆன் இன்ட்ரொடக்ஷன் டு தி பிரின்சிபல்ஸ் ஆஃப் மாரல்ஸ் அண்டு லெஜிஸ்லேஷன் என்ற படைப்பில் பெந்தாம் இவ்வாறு கூறுகிறார்:[4]:309n
“ | அவைகளால் [விலங்குகளால்] சிந்திக்க முடியுமா? என்பதோ அவைகளால் பேச முடியுமா? என்பதோ இங்கு கேள்வி அல்ல, மாறாக அவைகளால் வலிக்கும் துன்பத்திற்கும் ஆட்பட முடியுமா? என்பதே கேள்வி. | ” |
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads