தமிழரசுக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழரசுக் கழகம் (Tamil Arasu Kazhagam) ம. பொ. சிவஞானம் என்பவரால் 1946, நவம்பர் 21 அன்று சென்னையில் தமிழ்முரசு மாத இதழ் அலுவலகத்தில் 70 இளைஞர்களுடன் கூடி நிறுவிய அமைப்பாகும். 'தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும். சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் உரிமை தமிழருக்கு உண்டு' என்பது தமிழரசு கழகத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது.[1] இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து அவற்றுக்காகப் போராடும் நோக்கோடு இந்த அமைப்பு செயல்பட்டது. ம.பொ.சி இதன் தலைவராகச் செயல்பட்டார். மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கினார். தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் (தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார். சென்னை தமிழகத்திற்கு தலைநகராக ஆனதற்கு ம. பொ. சியின் தமிழரசுக் கழகமும் ஒரு காரணமாகும்.14 செப்டம்பர் 2022 அன்று இந்த கட்சியின் அங்கீகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.[2]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads