தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
இந்தியாவிலுள்ள அரசு அமைப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) அரிசி, கோதுமை, பருப்பு, மண்ணென்ணெய், ரவா, உணவு எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களிடையே பொது விநியோகம் செய்வதற்காக இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு 1972-ஆம் ஆண்டில் நிறுவியது.
Remove ads
நோக்கம்
- நெல், கோதுமை, பருப்பு போன்ற பொருட்களை கொள்முதல் செய்வது.
- கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கிகளில் சேமித்து வைத்தல்.
- கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை பொது விநியோகத் திட்டத்திற்காக நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைத்தல்.
நடவடிக்கைகள்
- நெல் போன்ற உணவு தானியங்களை வேளாண் குடிமக்களிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்வது.[1]
- நெல்லை அரைப்பதற்கு 22 நவீன அரிசி ஆலைகளை இயக்குதல் [2]
- பொது விநியோகத்திற்காக இந்நிறுவனத்தின் அமுதம் சிறப்பங்காடிகள் [3] மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்குதல்[4]
- கடலூர், திருப்பத்தூர் (வேலூர்), பட்டுக்கோட்டை, ஆரணி, திருச்சி, உதகமண்டலம், மண்டபம் மற்றும் இராமேசுவரம் ஆகிய இடங்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்வதற்கு பங்க்குகளை இயக்குகிறது.[5]
- உணவு தானியங்களை சேமித்து வைக்க 17 சேமிப்பு கிடங்குகளை இயக்குகிறது.[6]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads