தாமஸ் பெக்கெட்

From Wikipedia, the free encyclopedia

தாமஸ் பெக்கெட்
Remove ads

தாமஸ் பெக்கெட் அல்லது கேன்டர்பரி நகரின் தூய தாமஸ் பெக்கெட்[1] (21 டிசம்பர் c. 1118 (அல்லது 1120) – 29 டிசம்பர் 1170) என்பவர் கேன்டர்பரி பேராயராக 1162 முதல் 1170இல் கொலை செய்யப்படும் வரை இருந்தவராவார். கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியம் இவரை புனிதர் என்றும் மறைசாட்சி என்றும் வணங்குகின்றது. 1162இல் கேன்டர்பரி பேராயரின் மறைவுக்குப்பின், தனக்குச் சாதகமாக இருப்பார் என்று கருதி, அப்போது இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த இரண்டாம் ஹென்றி பெக்கெட்டை பேராயராகப் பரிந்துரைத்தார். மன்னருடன் திருச்சபையின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்த பூசல்களினால், இவரை மன்னரின் ஆட்கள் இவரின் மறைமாவட்டப் பேராலயத்திலேயே வெட்டிக்கொன்றனர். திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் இவருக்கு புனிதர் பட்டமளித்தார். இவரின் விழா நாள் 29 டிசம்பர் ஆகும்.

விரைவான உண்மைகள் புனித தாமஸ் பெக்கெட், மறைமாநிலம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads