திமிலர்

From Wikipedia, the free encyclopedia

திமிலர்
Remove ads

திமிலர் என்பவர்கள் சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்த மீனவர்கள் குடிகள் ஆவர். திமில் என்பது சங்க காலத் தமிழர் பயன்படுத்திய கடல் நீர் கலங்களுள் ஒன்றாகும். இக்கலத்தை ஓட்டியவர்கள் திமிலர்கள். மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடும் வன்கைத் திமிலர் என்னும் வரி இவர்களை நிறையுள்ள கலங்கலையும் செலுத்த வல்ல ஆற்றல் உடையவராய் காட்டுகிறது.[1][2]

Thumb
திமிலர்

திமிலர்களின் சில பழக்க வழக்கங்கள்

  • திமிலைக் கடலில் விரைந்து செலுத்துவர்.[3][4]
  • திமிலில் சென்று சுறா மீன்களை வாளால் வெட்டுவர்.[5] தூண்டிலிலும் மீன் பிடிப்பர்.[6] மீன் பிடிக்க வில்லையும் பயன்படுத்துவர்.[7] கயிற்றில் கட்டிய உளியை வீசி மீன் பிடிப்பர்.[8]
  • பிடித்து வந்த மீனை மரநிழலில் உறவினர்களுக்குப் பகிர்ந்தளிப்பர்.[9] வேலால் கிழித்துப் பங்கிடுவர்.[10]
  • நெல்லரிசி புளிக் கட்டுச்சோறு கொண்டு செல்வர்.[11]
  • இரவில் செல்வர்.[12] திமிலில் விளக்கு எரியும்.[13] மாடத்திலிருந்து அதனை எண்ணி விளையாடுவர்.[14][15][16] உப்புக் குவியலின்மீது ஏறியும் எண்ணுவர்.[17] சில நாள் செல்வதில்லை [18]
  • திமிலில் அணி அணியாகச் செல்வர்.[19] கரையேறும்போது பெருத்த ஆரவாரம் இருக்கும்.[20]
  • திமிலில் கொண்டுவந்த மீனை மணல் பரப்பில் மீன் எண்ணெய் ஊற்றி எரியும் கிளிஞ்சல் விளக்கொளியில் இரவில் விற்பர்.[21]
  • வலிமையுடைய திண்திமில் என் தந்தையினுடையது, உன்னுடைய தந்தையினுடையது என உரையாடி மகிழ்வர்.[22][23]
  • யானைமீது செல்வது போல் திமிலில் செல்வர்.[24][25]
  • பழைய திமில்களை அழித்துவிடுவர். பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் (அகம் 10)
  • கொற்கைத் துறைமுகத்தில் திமிலில் சென்றவர் மீன் கொண்டுவராமல் முத்துக் கிளஞ்சல்களைக் கொண்டுவருவர். அவர்களைக் கரையில் உள்ளவர்கள் சங்கு ஊதி வரவேற்பர்.[26]
  • சில இரவு வேளைகளில் சூடான மட்டு [27] பருகிக் குரவை ஆடுவதும் உண்டு.[28]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads