திருகோணமலை மறைமாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருகோணமலை மறைமாவட்டம் (Diocese of Trincomalee, இலத்தீன்: Dioecesis Trincomaliensis) இலங்கையின் கிழக்கேயுள்ள ஒரு உரோம கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இதன் தற்போதைய ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகை ஆவார்.

விரைவான உண்மைகள் திருகோணமலை மறைமாவட்டம்Dioecesis Trincomaliensis Trincomalee Diocese, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

திருகோணமலை மறைமாவட்டம் கொழும்பு உயர்மறைமாவட்டம், மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக 1893 ஆகத்து 25 இல் நிறுவப்பட்டது.[1] இம்மறைமாவட்டம் 1967 அக்டோபர் 23 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] 1975 டிசம்பர் 19 இல் இம்மறைமாவட்டத்தின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட அனுராதபுரம் மறைமாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.[1] இதன் பின்னர் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் 2012 சூலை 3 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருகோணமலை மறைமாவட்டம் என மீண்டும் பெயரிடப்பட்டது. மற்றைய பகுதி மட்டக்களப்பு மறைமாவட்டம் என்ற பெயரில் தனியான மறைமாவட்டம் ஆனது.[1]

Remove ads

ஆயர்கள்

மேலதிகத் தகவல்கள் #, ஆயர் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads