திருக்கழுகுன்றம்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்கழுக்குன்றம் (ஆங்கிலம்:Tirukkalukkundram), இந்திய ஒன்றியதில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் திருக்கழுகுன்றம் வட்டம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிப் பகுதியில் வேதகிரிஸ்வரர் திருக்கோயில், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நீதிமன்றம் ஆகியவற்றினை கொண்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சியாகும். திருக்கழுக்குன்றம் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
திருக்கழுக்குன்றம், மாவட்டத் தலைமையிடமான செங்கல்பட்டில் இருந்து கிழக்கில் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் அருகே அமைந்த தொடருந்து நிலையம் 14 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும். இதனருகே வடக்கில் மறைமலைநகர் 25 கி.மீ. மற்றும் தெற்கில் வெம்பாக்கம் உள்ளது. இப்பேரூராட்சி சென்னையிலிருந்து 65 கிலோ மீட்டர் தூரத்திலும், செங்கல்பட்டு - மாமல்லபுரம் மாநில நெடுஞ்சாலையில் 14 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.
Remove ads
பேரூராட்சியின் அமைப்பு
11.20 சகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 164 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,419 வீடுகளும், 29,391 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.34% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1018 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
ஆதாரங்கள்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads