திருக்காளத்தி நாதர் உலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்காளத்திநாதர் உலா கவிராச பிள்ளை எழுதிய 16 ஆம் நூற்றாண்டு நூல். இந்த நூலின் பெயர் சில ஏடுகளில் காளத்தியாள்வார் உலா [1] என்று உள்ளது. இது சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட நூல். [2]
நூலில் சொல்லப்படும் செய்திகள்
- சிவன் ஐம்பூதமாய் விளங்குகிறான். [3]
- காளத்தியில் சிவன் ஒலி தரும் காற்றாக விளங்குகிறான்.
- காளத்தி ஆற்றூர் தொண்டைநாட்டின் பகுதி
- காலத்திக்கு மூன்று சோழர்கள் விக்கிரம சோழன், குலோத்துங்கன், இராசேந்திர சோழன் திருப்பணி செய்தனர். அதனால் இவ்வூருக்கு மும்முடிச் சோழபுரம் என்னும் பெயரும் உண்டு.
- வரகுண பாண்டியன் இவ்வூரை வழிபட்டான்
- நக்கீர தேவ நாயனார் பாடிய கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி என்னும் நூலை நினைவுகூர்கிறார்.
- அணு, துடி, கலை, காட்டை, கணம், மாத்திரை, எல்லை, கடிகை, நண்பகல், காலை, உச்சி, அந்தி, திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம், ஓரை, மாதம், உவா, வருடம், உகம், கற்பம், சங்காரம் – முதலான கால கால-அளவைப் பெயர்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- பச்சை, வடம், கலை, மேற்கட்டி, சிறுபாகை, அணைபாகு, சட்டை, கச்சு, பவந்தம், துப்பட்டி, துண்டம், கோவணம், போர்வை, வேட்டி – முதலானவை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பருத்தி ஆடைகள்.
- கடல், கழிநீர், ஏரி, நீர்க்குளம், கால்வாய், துரவு-கிணறு, நீர் வற்றாத தடாகம், மடு, கேணி, வாடவி, ஆறை, அகழ், ஊற்று, ஓடை – என்னும் நீர்நிலைகளின் பெயர் தொனிக்குமாறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
- பெதும்பைப் பருவத்தில் கழங்காடுதலும், மங்கைப் பருவத்தில் அம்மானையாடுதலும் சொல்லப்படுகின்றன.
- வடதமிழர்களின் குலதெய்வமாக திருக்காளத்தியப்பரை வணங்கினார்கள்.
Remove ads
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads