திருக்குறுந்தாண்டகம்

தமிழ் வைணவ இலக்கிய படைப்பு From Wikipedia, the free encyclopedia

திருக்குறுந்தாண்டகம்
Remove ads

திருக்குறுந்தாண்டகம் (Tirukkuruntantakam) என்பது வைணவ சமயத்தின் பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரருளிய நூலாகும்.[1][2][3] இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச்சார்ந்து இயற்றப்பட்டதாகும்.

Thumb
அனுமன் இலங்கையை எரியூட்டுகிறார், ராஜா ரவி வர்மா ஓவியம்.

பெயர்க்காரணம்

பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் வந்தால் அது குறுந்தாண்டகம் என்றுரைப்பர்.[4][5] திருக்குறுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது[6].

நாலாயிரத்திவ்யபிரபந்தத்திரட்டில் பங்கு

இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2032 முதல் 2051 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 20 பாடல்கள் உண்டு[7].[8]

திருக்குறுந்தாண்டகம் முதற்செய்யுள்

நிதியினைப் பவளத் தூணை
நெறிமையால் சினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டுமுன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கிஎன் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன் விடுகி லேனே. [9]

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads