திருவாதவூர்
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவாதவூர் (ஆங்கிலம்: Thiruvathavur) என்ற ஊர் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின்,[1] மதுரை புறநகர்ப் பகுதியை அடுத்த இருந்தையூரின் ஒரு பகுதியாகும்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 168 மீட்டர் உயரத்தில், 9.9569°N 78.3145°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருவாதவூர் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது. இது மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 20 கி.மீ. தொலைவில் வடக்கே அமைந்துள்ளது.
சிறப்பு
திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இந்த ஊரில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற திருமறைநாதர் கோயில்[2] அமைந்துள்ளது. இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன. இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், பதிப்பு 2005
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads