திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், இந்தியா

From Wikipedia, the free encyclopedia

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், இந்தியா
Remove ads

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் அனைத்து திறன் மேம்பாட்டு முயற்சிகளையும் ஒருங்கிணைக்க 9 நவம்பர் 2014 அன்று இந்த அமைச்சகம் நிறுவப்பட்டது. இதன் மூத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆவார்.[2] இணை அமைச்சர் இராஜீவ் சந்திரசேகர் ஆவார். திறமையான மனிதவளத்தின் தேவைக்கும், வழங்கலுக்கும் இடையே உள்ள துண்டிப்பை நீக்கி, புதிய திறன்கள் மற்றும் புதுமையான சிந்தனைகளை தற்போதுள்ள வேலைகளுக்கு மட்டுமின்றி உருவாக்கப்பட உள்ள வேலைகளுக்கும் புகுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.[3]

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
Remove ads

செயல்பாடுகள்

  • பல்வேறு மத்திய அமைச்சகங்கள்/துறை, மாநில அரசுகள், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்[4] மற்றும் தனியார் துறை ஆகியவற்றுக்கு இடையே திறன் மேம்பாட்டிற்கான அணுகுமுறையை ஒருங்கிணைத்து ஒத்திசைத்தல்.
  • உற்பத்தித் தரம் மற்றும் தரநிலைகள் துறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய தேசிய திறன்கள் தகுதி கட்டமைப்பு[5]ஐ தொகுத்து செயல்படுத்தல்.
  • மாநில திறன் மேம்பாட்டு பணிகளுக்கான தொடர் அமைப்பாக செயல்படுதல்.
  • பலதரப்பு முகமைகள் மற்றும் தனியார் துறை உள்ளிட்ட பன்னாட்டு முகமைகள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து திறன் மேம்பாட்டிற்கான கூடுதல் நிதி வளங்களை திரட்டுதல்.
  • தற்போதுள்ள திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அவற்றின் செயல்திறனை மதிப்பிடும் நோக்கில் மதிப்பீடு செய்து, அவற்றை மேலும் திறம்படச் செய்ய சரியான நடவடிக்கையைப் பரிந்துரைத்தல்.
  • ஆய்வக தகவல் மேலாண்மை அமைப்பின் [6] திறன் மேம்பாடு தொடர்பான தேசிய தரவுத் தளத்தை நிறுவி பராமரித்தல்.
  • பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகளின் திறன் தேவைகள் கவனிக்கப்படுவதை உறுதி செய்தல்.
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads